நடிகர் தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று நடிகை ஷனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதற்கு பதில் அளித்த தர்ஷன், ‘சனம் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார். அவருடனான காதல் முறிந்துவிட்டது’ என்றார்.
இந்நிலையில் வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது தர்ஷனுடன் தன்னை நடிகை அபிராமி பேச விடாமல் தடுத்து அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். ஏன் என்னை பேசவிடாமல் தடுக்கிறாய் என்று கேட்டதற்கு, உனக்கு மன நலன் சரியில்லை டாக்டரை போய் பாரு எனக் கூறினார். அவரது பேச்சால் நான் வேதனை அடைந்தேன்’ என தெரிவித்திருக்கிறார் ஷனம் ஷெட்டி.