×

மாஃபியா படத்தை தொடர்ந்து தனுசுடன் இணைந்து மிரட்ட வருகிறார் கார்த்திக் நரேன்

தனுஷ் நடிக்கும் 43-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இதையடுத்து அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். இதன் மூலம் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் வரிசையில் 5-வது முறையாக ஜி.வி.பிரகாஷ் தனுஷ் - கூட்டணி இணைந்துள்ளது.

Tags : Karthik Narain ,Mafia ,
× RELATED கோவையில் கார், டூவீலர் பழுது...