×

விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 1615 வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-23ம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40% மானியத்திலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். முதற்கட்டமாக, 1615 வேளாண்  இயந்திரங்களை மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50% மானியத்துடன், கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும். இதனால், இப்பிரிவினைச் சார்ந்த விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை வெகுவாக குறையும். இதற்கான மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்த சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு சிறுதானிய சுத்திகரிப்பு, பயறு உடைத்தல், எண்ணெய் பிழிதல் போன்ற வகைகளில் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக 40% மானியம் வழங்கப்படும். இயற்கையில் அதிகமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலைக் கொண்டு, கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை, முருங்கை இலை போன்ற வேளாண் விளைபொருட்களை சுகாதாரமான முறையில் சீராக உலர்த்தி, விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்டிட தனிப்பட்ட விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு 40% மானியத்தில், 400 முதல் 1000 சதுர அடி வரை பாலிகார்பனேட் தகடுகளுடன் கூடிய சூரிய கூடார உலர்த்தியை நிறுவுவதற்கு, 40% மானியம் வழங்கப்படும்.வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம் சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40% மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். வேளாண் இயந்திர சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து, பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தேவைப்படும் சிறிய அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கி கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்கு 80% மானியம் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும்.அதிக வேலையாட்கள் தேவைப்படும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 40% மானியம் அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் விவசாயக் குழுக்களுக்கு, மானியம் போக மீதமுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கு, வங்கியின் மூலம் கடன் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பெறும் கடனுக்கு, வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் மூன்று சதவிகித வட்டி மானியம் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்று பயன்பெற, ஆதார் அட்டை நகல், புகைப்படம், சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல், ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்களுடன் உழவன் செயலி மூலமாகவோ அல்லது https;//aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். இயந்திரம்    அதிகபட்ச மானியம்டிராக்டர்    ரூ.5 லட்சம்மினி டிராக்டர்    ரூ.2.25  லட்சம்பவர் டில்லர்    ரூ.85,000 நெல் நடவு இயந்திரம்    ரூ.5 லட்சம் களையெடுக்கும் இயந்திரம்    ரூ.63,000சுழல் கலப்பை    ரூ.44,800 விதைப்பு கருவி    ரூ.24,100நிலக்கடலை அறுவடை  இயந்திரம்    ரூ.75,000 கொத்து கலப்பை    ரூ.50,000 நெல் அறுவடை  இயந்திரம்    ரூ.11 லட்சம் பல்வகை பயிர் கதிரடிக்கும்  இயந்திரம்    ரூ.2.50 லட்சம் கரும்பு சோகையை துகளாக்கும் கருவி    ரூ.1.25 லட்சம் தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவி    ரூ.63,000 வைக்கோல்  கட்டும் கருவி    ரூ.2.25 லட்சம் கரும்பு சோகை உரிக்கும் கருவி    ரூ.75,000புதர் அகற்றும் கருவி    ரூ.30,000 தட்டை வெட்டும் கருவி    ரூ.20,000 …

The post விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 1615 வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,M. R.R. K.K. ,Bannerselvam ,Tamil Nadu ,
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...