×

துபாய்காரரை மணக்கும் தமிழ் நடிகை

எல்லாம் அவன் செயல், சேவற்கொடி, ராமானுஜம் போன்ற படங்களில் நடித்ததுடன் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாமா. இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு படம்கூட தேடி வரவில்லை. காத்திருந்து பார்த்தவர் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் துபாய் தொழில் அதிபர் அருண் என்பவருடன் அவருக்கு திருமணம் செய்ய இருகுடும்பத்தாரும் பேசி வந்தனர்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன் பாமா, அருண் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அருண், பாமா இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். அருண் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர்.  கனடாவில் படித்துவிட்டு துபாயில் தொழில் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த மாதம் இறுதியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.

Tags : Tamil ,actress ,Dubai ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!