×

லாரியில் சிக்கி வாலிபர் சாவு

தாம்பரம்: குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). இவர் நேற்று துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி ரேடியல் சாலையில் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழுந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பு சுவரில் வேகமாக மோதியது. இதில், ஹரிஹரன் சாலையின் மற்றொரு திசையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, ஹரிஹரன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து, குன்றத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் மாரியப்பனை (34) கைது செய்தனர்….

The post லாரியில் சிக்கி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Hariharan ,Asthinapuram ,Chrompet ,Duraipakkam ,Pallavaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...