×

சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது  

அண்ணாநகர்: விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 16ம் தேதி திடீரென மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர், சூளைமேடு போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த, சிதம்பரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (25) என்பவர், சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்றது தெரிந்தது. சிதம்பரம் அருகே ஒரு வீட்டில் இருந்த அவர்களை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து, சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை சிவசுப்பிரமணியன் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இவ்வழக்கை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். அதன்பேரில் போலீசார், போக்சோ உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சிறுமியை கெல்லீசில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்….

The post சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது   appeared first on Dinakaran.

Tags : Bocso ,Annanagar ,Virugampakkam ,Pocso ,
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி