முதல்முறையாக அமலாபால் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள படம், அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அமலா பால் கூறியதாவது: அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் நான், உயிருடன் தப்பித்தேனா என்பது கதை. நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது மிகப் பெரிய விவாதப் பொருளாக இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படம் வருவது, அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். க்ராவ்மகா என்ற தற்காப்புக்கலையை கற்றுக்கொண்டு சண்டைக் காட்சியில் நடித்த நான், ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தருடன் மோதியிருக்கிறேன். என் உயிரை பணயம் வைத்து, எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் ஒரிஜினலாக நடித்துள்ளேன்.
பெண்கள் கண்டிப்பாக தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லா விஷயங்களையும் தைரியமாக எதிர்கொண்டு சாதிக்க முடியும். கதை பிடித்தால் மட்டுமே புதுப்படத்தில் நடிப்பேன். ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து நான் வித்தியாசப்படுகிறேன்.