மகேஷ் பாபு நடிப்பில், சரிலேறு நீக்கெவரு தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் படத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. தற்போது 3 மாதங்கள் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மகேஷ் பாபு. அதற்கு பிறகே அவர் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.
அந்த படத்தை வம்சி பய்டிபள்ளி இயக்குகிறார். பிரசாந்த் நீல் படத்தில் நடிப்பது பற்றி மகேஷ் பாபு கூறுகையில், ‘இது உண்மை கிடையாது. அதேவேளையில், பிரசாந்த் நீல் எனக்கு பொருத்தமான கதையுடன் வந்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்’ என்றார்.