அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில், கதையின் நாயகனாக காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் ஒரேகட்டமாக நடந்து முடிகிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகிறது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நாவல் ஒன்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்துக்கு வாடிவாசல் என்று தலைப்பு வைத்திருப்பதாக, நேற்று முன்தினம் அறிவித்தார் வெற்றிமாறன். தற்போது சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துவிட்டார்.