×

நயன்தாராவை கண்கலங்க வைத்தது யார்?

கோடிகளில் சம்பாதிக்கிறார் நயன்தாரா. அவரது கால்ஷீட்டுக்காக இன்னமும் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக விரதம் இருப்பதுடன் கால் களில் செருப்பும் அணியாமல் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்து கடவுள்களையும் பயபக்தி யுடன் வணங்கி வருகிறார். சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ்சிவனுடன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினாலும் அன்றைய தினம் அழுது தீர்த்துவிட்டாராம் நயன்தாரா. ஏன், நயனுக்கு என்னாச்சு என்று விசாரித்த போது,’ஒவ்ெவாரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போதும் அவரது அண்ணன் மகள் ஏஞ்சலினா நயன்தாராவுடன் இருப்பார். அவர் பிறந்த பிறகுதான் நயனுக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் திடீெரன்று அவர் துபாய் புறப்பட்டுசென்றுவிட்டதால் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் தன்னுடன் இல்லையே என்று கண்கலங்கி அழுதுவிட்டாராம் நயன்தாரா.

பின்னர் ஆறுதல் அடைந்த நயன்தாரா புத்தாண்டு தினத்தை கொண்டாடினார். வழக்கமாக ஒவ்வொரு கொண்டாட்டத்தின்போதும் நயன்தாராவுடன் காதலன் விக்னேஷ் சிவன் தவறாமல் இடம்பெறுவார். ஆனால் இம்முறை வெளியான படத்தில் நயன்தாரா மட்டும் தனிமையில் இருக்கிறார். விக்னேஷ் சிவனை காணவில்லை. இது கோலிவுட்டில் பல்வேறு கிசுகிசுக்களை கிளப்பிவிட்டிருக் கிறது. விக்னேஷ்சிவன் நயன்தாராவை விட்டு எங்குபோனார் என்று சிலர் கேட்டுள்ளனர்.

Tags : Nayanthara ,
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது