கமல்ஹாசன் எழுதி இரட்டை வேடத்தில் நடித்த படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 2001ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்து எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. விமர்சனங்களும் எதிர்மறையாக வந்தது. இதனால் படகுழு ஏமாற்றம் அடைந்ததுடன் தயாரிப்பாளரும் நஷ்டம் ஏற்பட்ட தாக தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு இப்படத்தை டிவியில் பலமுறை திரையிட்ட துடன் சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் நடந்த பென்டாஸ்டிக் விழாவில் திரையிடப்பட்டது. இந்நிலையில் ஆளவந்தான் படத்தில் சில மாறுதல்களை மேற்கொண்டு பட நீளத்தையும் குறைத்து இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.