×

ஹீரோ மீது நடிகை புதிய புகார்; சாப்பிட விடாமல் பட்டினி போட்டார்

ஒரு சில ஹீரோக்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறி வருகின்றனர். நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை நேஹா துப்யா, ஹீரோ ஒருவர் தன்னை பட்டினிபோட்டதாக வித்தியாசமான புகார் கூறியிருக்கிறார். தமிழில் அஜீத் நடித்த வில்லன் படத்தை தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.

அதில் கதாநாயகனாக ராஜசேகர் நடித்திருந்தார். மேலும் என்.டி.பால கிருஷ்ணா நடித்த பரம் வீர் சக்ரா, தருண் நடித்த நின்ன இஷ்டப்படன்னு ஆகிய படங்களிலும் மற்றும் பல்வேறு இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார் நேஹா. அவர் கூறும்போது,’ தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தேன். மதிய உணவு வேளை வந்ததால் பசியாக இருந்தேன். சாப்பாடு எடுத்துவரும்படி கூறியபோது, இன்னும் ஹீரோ சாப்பிடவில்லை.

அவர் சாப்பிட்டு முடித்தபிறகு நீங்கள் சாப்பிடுங்கள் என்றனர். வேறுஒருவரிடம் கேட்டபோது  அங்கிருந்த எல்லோருமே அதே பதிலை சொன்னார்கள். ஹீரோ சாப்பிட்டு முடிக்கும் வரை என்னை சாப்பிடவே விடவில்லை. அதுவரை பட்டினியாக இருந்தேன்’ என்றார். ராதிகா ஆப்தே ஏற்கனவே ஹீரோவை கன்னத்தில் அறைந்ததாக கூறிய அதே ஹீரோவைத்தான் நேஹாவும் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் யூகித்து கமென்ட் வெளியிடுகின்றனர்.

Tags : Actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...