×

 குடும்பம் நடத்த வர மறுத்ததால் நடுரோட்டில் மனைவியை அடித்து உதைத்த கணவன்: அமைந்தகரையில் பரபரப்பு

அண்ணாநகர்: அமைந்தகரையில் நடுரோட்டில் மனைவியை அடித்து உதைத்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (28). இவர், அரும்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தெரியவந்ததும் ஸ்ரீதரை விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதன் காரணமாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தகராறு நடந்தபோது விரக்தி அடைந்த விஜயலட்சுமி, அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று தங்கிவிட்டார். இரு தினங்களுக்கு முன் அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் விஜயலட்சுமி நடந்து வரும்போது பார்த்துவிட்ட ஸ்ரீதர், மனைவியை வழிமறித்து தன்னுடன் வந்துவிடு என்று கூறியுள்ளார். அவர் வர மறுத்ததால் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். பிறகு திடீரென ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்த சிலர் ஓடிவந்து தடுத்தபோது ஸ்ரீதர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதன் பிறகு படுகாயம் அடைந்த விஜயலட்சுமியை அப்பகுதியினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார்.இது, சம்பந்தமாக விஜயலட்சுமி அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘‘எனது கணவர் தினமும் என்னை அடித்து சித்ரவதை செய்து வருகிறார். நடுரோட்டில் என்னை சரமாரியாக தாக்கினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அரும்பாக்கம் டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த ஸ்ரீதரை கைது செய்தனர். அவர் மீது மனைவிக்கு கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் ஸ்ரீதரை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post  குடும்பம் நடத்த வர மறுத்ததால் நடுரோட்டில் மனைவியை அடித்து உதைத்த கணவன்: அமைந்தகரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nadurote ,Nadurod ,Samanthakaram ,Chennai Parishad ,
× RELATED நடுரோட்டில் போதையில் அரை நிர்வாணமாக...