×

மஞ்சுவாரியருடன் ஜோடியாக நடிக்க மாஜி கணவர் ஆசை

மலையாள நட்சத்திரங்கள் திலீப், மஞ்சுவாரியர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிறகு திலீப் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொல்லை தரப்பட்ட வழக்கில் திலீப்பை கேரள போலீஸ் கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். நடிகையின் பாலியல் தொல்லை தொடர்பான வீடியோவை பார்க்க அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

அதற்கு கோர்ட் அனுமதி வழங்கியது. அதன்பேரில் அந்த வீடியோவை திலீப் பார்த்தார். இதுகுறித்து திலீப்பிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும்போது,’வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது.  மஞ்சுவாரியரிடம் (முதல் மனைவி) எனக்கு விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இருவரும் சேர்ந்து நடிப்பீர்களா என்கிறார்கள். பொருத்தமான கதை கிடைத் தால் மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.

மலையாள திரையுலகில் போதை மருந்து பயன்பாடு இருக்கிறதா என்கின்றனர். அதுபற்றி  எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். மலையாள நடிகரான திலீப் தமிழில் விஜயகாந்த் நடித்த ராஜ்யம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல் தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார் மஞ்சுவாரியர். மீண்டும் தலா ஒரு தமிழ் படத்தில் திலீப், மஞ்சுவாரியர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஜோடியாக அல்ல, இருவரும் வெவ்வேறு படங்களில் நடிக்க உள்ளனர்.

Tags : Manchuvariyar ,
× RELATED மஞ்சு வாரியரை பற்றி அவதூறு: சினிமா டைரக்டர் கைது