தம்பி, ஆயுத எழுத்து, அன்பே சிவம், வேட்டை, ரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் மாதவன். தற்போது மும்பையில் தங்கியிருக்கிறார். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் தேர்வு செய்தே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். குறிப்பாக மசாலா படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார். அவர் நடித்த இறுதிச்சுற்று தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா படத்தில் நடித்தார். தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் நடித்து வருகிறார். ‘ராக்கெட்டரி: தி நம்பி எபெக்ட்’ என அப்படத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் மாதவன்.
அவர் கூறும்போது,’இறுதிச்சுற்று போன்ற நல்ல படங்கள் அவ்வப் போது உருவாகிறது. ஆனால் இறுதிச்சுற்று படத்தை ரிலீஸ் செய்வதற்கு 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பலரும் மசாலா படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. எல்லாவற்றையும் ஏற்பதில்லை. தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன்’ என்றார்.