×

வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்

பல மொழிகளில் உருவாகும் புதிய வெப்சீரிஸ் மற்றும் பொன்னியின் செல்வன், வானம்  கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வரும் சரத்குமார் கூறியதாவது: நான், என் மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பிறந்தாள் பராசக்தி. கதையும், எங்கள் கேரக்டரும் சரியாக அமைந்ததால், ஒரே படத்தில்  மூவரும் இணைந்து நடிக்கிறோம். முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கிறேன். ஷெர்லாக் ஹோம்ஸ் போல் துப்பறியும் கதை கொண்ட இது, பல்வேறு மொழிகளில் 5  வருடங்கள் வரை ஒளிபரப்பாகும்.

போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி, அந்த படம் பிரச்னையில் சிக்கி, ரிலீசாகும் வரை காத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஒரு தந்தையாக என் மகளுக்கு நான் உதவி செய்து, பிரபல இயக்குனர்களின் படங்களில் அவரை நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது நான் அதை செய்யாமல்  இருந்ததை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். இதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று வரலட்சுமி தனியாகப் போராடி ஜெயித்திருக்கிறார்.

Tags : Sarathkumar ,Varalakshmi ,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....