வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது கூழாங்கல் ஆறு. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஆற்றில் குளித்தும், அப்பகுதியில் உணவருந்தியும் மகிழ்வது வழக்கம். இதற்காக அப்பகுதியில் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்கிருந்த 3 கடைகளை சேதப்படுத்தியது. கடைகளை உடைத்து அதிலிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளது. மேலும் ஒரு கடையை சூறையாடிய காட்டு யானை கடையை இழுத்து போட்டு விட்டு சென்றுள்ளது. மேலும் அங்கிருந்த கன்றுக்குட்டியை காலால் மிதித்து கொன்றுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதிக்கு நடைபயிற்சி மேற்கொள்ள சென்றவர்கள் கடைகள் துவம்சம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைகளை துவம்சம் செய்து கன்றுக் குட்டியை காலால் மிதித்து கொன்ற யானையால் அப்பகுதியில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது….
The post சாலையோர கடைகள் துவம்சம்; கன்றுக்குட்டியை மிதித்து கொன்ற யானை: வால்பாறையில் அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.