×

ஓட்டல் உரிமையாளர் மர்ம சாவு; கிணற்றில் சடலம் மீட்பு

நெல்லை: நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி-கூந்தன்குளம் சாலை ஓரமுள்ள ஒரு கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளத்தை சேர்ந்த ராஜநாராயணன் (55), என்பதும், நெல்லை சந்திப்பு பகுதியில் பிரபல அசைவ ஓட்டல் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இவர் தனது மனைவி செல்வி மற்றும் 1 மகன், 1 மகளுடன் நெல்லையில் வசித்து வந்துள்ளார். அவரது மகன் குருசங்கருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ராஜநாராயணனுக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். நேற்று அவர் சொந்த ஊரான மூலைக்கரைப்பட்டிக்கு காரில் வந்துள்ளார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் தான் அவர் இரவில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கைகள் கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் வந்த காரும் அப்பகுதியில் நின்றுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மர்மமான முறையில் இறந்த ராஜ நாராயணன் உடல், நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஓட்டல் அதிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் நெல்லை மற்றும் கூந்தன்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post ஓட்டல் உரிமையாளர் மர்ம சாவு; கிணற்றில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Marma Sau ,Nellai ,Nellai district ,Kookaraipatti-Koondankulam road ,Kookaraipatti ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்