×

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது

அண்ணாநகர்: விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாமரைகண்ணன் (42). இவர், கடந்த 3 நாட்களுக்கு முன் பாடி மேம்பாலத்தின் கீழ், சவாரிக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 3 பேர், தாமரைகண்ணனை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் ஆட்டோ சாவியை கேட்டு மிரட்டினர். அதிர்ச்சியடைந்த அவர், ‘‘திருடன் திருடன்’’ என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். புகாரின்பேரில், திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வெற்றி (19), ஆனந்தன் (19) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய  வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த மாதவன் (19) என்பவரை திருமங்கலம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு பட்டா கத்தி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாதவனை புழல் சிறையில் அடைத்தனர்….

The post ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Thamaraikannan ,Virugampakkam ,Badi ,
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி