×

வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளான முகலிவாக்கம், மாங்காடு, குலப்பக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து வருகிறார். சென்னை மாநகராட்சிக்கு புறநகர் பகுதிகளில் இருக்க கூடிய முகலிவாக்கம், மாங்காடு, குலப்பக்கம் ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மழை நீர் தேங்கக்கூடிய நிலை ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிகளில் பொதுமக்களை பதிப்புகளில் இருந்து மீட்பதற்காகவும், மழை நீர் தேங்காமல் தவிர்ப்பதற்காகவும் தற்போது அங்கு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற கூடிய பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கூடுதல் கனரக மோட்டார்கள் கொண்டு அருகில் இருக்க கூடிய வடிகால்கள் வழியாக தேங்கியுள்ள மழை நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 4-வது நாட்களாக இந்த பணி தொடரும் நிலையில், தற்போது இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துவருகிறார். இந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து, பிரச்சனைகளின் தீவிரத்தை கேட்டறிவது மட்டுமின்றி தற்போது அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் நடைபெற்றுவரக்கூடிய நடவடிக்கைகளாய் துரித்தபடுத்த கூறி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கியுள்ளார். ஏற்கனவே 4 இடங்களில் கனரக மோட்டார்கள் வைக்கப்பட்டு அருகில் இருக்க கூடிய கால்வாய்கள் வழியாக மழை வெளியேற்றப்பட்டுவ வரக்கூடிய நிலையில், தேவைப்படும் இடங்களில் கூடுதல் கனரக மோட்டார்களை களமிறக்கி பணிகளை மேலும் துரிதப்படுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிகளில் இருக்க கூடிய மழைநீர் வெளிய கூடிய கால்வாய் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற அக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட, வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டது. …

The post வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Chennai ,Mughalivakkam ,Mangadu ,Kulapakkam ,Northeast ,
× RELATED கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு...