×

டிரைலர் லாரி மோதி புது மாப்பிள்ளை பலி

திருவொற்றியூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது அலி (29). ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அஸ்மா என்பவருடன் திருமணம் நடந்தது. நேற்று பிற்பகல் மணலியில் உணவு டெலிவரி செய்ய திருவொற்றியூர் அருகே பக்கிங்காம் கால்வாய் ஓர சாலையில் முகமது அலி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.  மணலி சாலை சந்திப்பில் திரும்பியபோது, பின்னால் வந்த டிரைலர் லாரி இவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முகமது அலி தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், அதுவும் உடைந்து நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மணலி போக்குவரத்து போலீசார், முகமது அலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்….

The post டிரைலர் லாரி மோதி புது மாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Tags : Pudu Mappillai ,Tiruvottiyur ,Muhammad Ali ,Puliantoppu Ambedkar ,Lorry Moti ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...