அரசியலில் இணைந்து செயல்படுவோம் என்று ரஜினியும், கமலும் சமீபத்தில் அறிவித்தனர். இதுபரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை சுஹாசினி கூறும்போது,’ரஜினி கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். அதுதான் எங்கள் ஆசை. ரஜினி, கமல் இருவருக்கும் வேறுவேறு கொள்கைகள்.
ஆன்மிக அரசியல் என்று ரஜினி தெரிவித்துள்ளார். கமல் வேறுபாலிசியை கடைபிடிக்கிறார். இந்த முரண்பாட்டில் இருவரும் வேறுபட்டிருப்பதுதான் அவர்கள் கூட்டணிக்கு தடையாக இருக்குமோ என தோன்றுகிறது. அதையும் தாண்டி அவர்கள் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.