×

மாஜி காதலனை கூலிப்படை வைத்து தாக்கிய மாணவி: புதிய காதலனுடன் சேர்ந்து சதி திட்டம்

குமாரபுரம்: குமரி மாவட்டம் வேர்கிளம்பி அடுத்த செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (22). வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், செங்கோடி அணைக்கரை பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவிக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறினர். காதலிக்கு பரிசு பொருட்களை பிரவீன் வாரி வழங்கினார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் பிரவீன், காதலியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டார். அவர்கள், படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறினர். ஆனால்,  கடந்த சில வாரங்களாக, பிரவீனை சந்திப்பதை காதலி தவிர்த்தார். செல்போனில் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால் அவரது நடவடிக்கையை பிரவீன் கண்காணித்துள்ளார். அப்போதுதான், அவரது  பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித்துடன் (20) காதல் வயப்பட்டு,  பைக்கில் சுற்றி திரிவது தெரிய வந்தது. காதலியை சந்தித்து கேட்டபோது,  உன்னை விட, அவன் தான் பெட்டர், எங்களை தொந்தரவு செய்யாதே என்று கூறியுள்ளார். இதனால் பிரவீன் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டார். அதன்படி பரிசு பொருட்களை திரும்ப தருவதாக கூறி நேற்று முன்தினம்  வேர்கிளம்பி பகுதிக்கு பிரவீனை காதலி அழைத்துள்ளார். இதை நம்பி வந்தவரை ஒரு பைக்கில் வந்த மேக்கா மண்டபம் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ் (30) மற்றும் ஒருவர் வழி மறித்தனர். அப்போது புதிய காதலன் ஜெனித்துடன், அந்த மாணவியும் வந்தார். அதற்குள் ஜெனித், ஜோஸ் உள்பட மூவரும் சேர்ந்து பிரவீனை  சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரவீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ெகாற்றிக்கோடு போலீசார், கல்லூரி மாணவி மற்றும் ஜோஸ், ஜெனித் உட்பட 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….

The post மாஜி காதலனை கூலிப்படை வைத்து தாக்கிய மாணவி: புதிய காதலனுடன் சேர்ந்து சதி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Kumarapuram ,Praveen ,Sengodi Matar ,Werkalambi ,Kumari district ,
× RELATED வீடு புகுந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்