×

நடைபாதையில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்த போலீசார்

பெரம்பூர்: கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை தெருவோரம் வசித்து வருபவர்கள் பாபு (72), கஸ்தூரி (65). கடந்த சில நாட்களாகவே கஸ்தூரி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வெகுநேரம் ஆகியும், கஸ்தூரி எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாபு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, கஸ்தூரி வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது, இறந்த பெண்ணின்  கணவர் பாபு உடலை அடக்கம் செய்ய போதிய வசதியில்லை என கூறினார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், கஸ்தூரியின் உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். அதன்படி, உதவி ஆய்வாளர் ராஜேஷ் மேற்பார்வையில், கொடுங்கையூர் பார்வதி நகர் சுடுகாட்டில் உயிரிழந்த கஸ்தூரிக்கு, அவர்களின் குடும்ப முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், அவரது கணவர் பாபுவை காப்பகத்தில் சேர்க்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். ஆதரவற்ற மூதாட்டியின் உடலை போலீசார் எடுத்து அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post நடைபாதையில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Babu ,Kasthuri ,Meenampal Road, Kodungaiyur ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...