×

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

பெரம்பூர்: சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 35 வயது பெண். இவர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘’கடந்த 9ம் தேதி காலை 4 மணிக்கு வீட்டில் தனது இரண்டு மகள்கள், கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது 10ம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மூத்த மகளை காணவில்லை என்றும் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் அவரை பற்றி விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், புளியந்தோப்பு வஉசி நகர் 1வது தெருவை சேர்ந்த விக்னேஷ் (22) என்பவர் என் மகளை அழைத்துச்சென்றிருப்பது தெரியவந்தது. எனவே வாலிபரிடம் இருந்து எனது மகளை மீட்டு தரவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், புளியதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை விக்னேஷ் அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று விக்னேஷ் கைது செய்து அவரது பிடியில் இருந்து சிறுமியை மீட்டனர். இதன்பின்னர் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Perambur ,Chennai tamarind ,
× RELATED 3 வயது குழந்தையிடம் செக்யூரிட்டி சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் கைது