வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாக முதலில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார. அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சி செய்து உடல் எடையை குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு. ஆனால் மாநாடு படத்தில் நடிக்காமல் மஃபிடி படத்தில் நடிக்க சென்று விட்டதால் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமானது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு இந்த படத்திலிருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்குமிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போட்டி படமாக சிம்பு நடிப்பில் மகாமாநாடு என்ற படம் உருவாகும் என்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரிப்பேன் என்றும் சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்திரன் அறிவித்தார்.
இதையடுத்து சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்த செய்தியை உறுதிப்படும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விரைவில் எஸ்டிஆரின் மாநாடு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.