தடயவியல் படமாக உருவாகிறது வி 1. பாவெல் நவகீதன் எழுதி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: கைரேகை எடுப்பது, போட்டோ எடுப்பது மட்டும்தான் ஃபொரென்ஸிக் (தடயவியல்) என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அதில் பல்வேறு பிரிவுகள் இருக்கிறது. இதுவரை திரைப்படங்களில் வராத ஃபொரென்ஸிக் கதையாக இது இருக்கும். இருட்டு என்றால் ஹீரோவுக்கு பயம். அப்படிப் பட்டவர் ஒரு முக்கிய வழக்கில் ஹீரோயினுக்கு உதவப்போய் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை புதுமையாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. இதற்காக ஃபொரென்ஸிக் நிபுணர் சித்தன் எழுதிய தடயவியல் பற்றிய இரண்டு புத்தகங்களிலிருந்து குறிப்புகளும், போலீஸ் உயர் அதிகாரி ஜேக்கப்பிடம் ஆலோசனையும் பெறப்பட்டு அதன் அடிப்படையில் உண்மைத்தன்மை யுடன் காட்சிகள் அமைக்கப்பட்டன.
ராம் அருண் காஸ்ட்ரோ ஹீரோ. விஷ்ணுபிரியா ஹீரோயின். விஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மனிஷா ஜித் நடித்திருக்கின்றனர். அரவிந்த் தர்மராஜ், என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரித்திருக்கின்றனர். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு. ரோனி ரப்ஹெல் இசை. இப்படத்தின் போஸ்டர் மூலமாக மறைந்திருக்கும் ஆங்கில எழுத்தை கண்டுபிடிக்கும் போட்டி சமூக வலைதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.