×

சொத்து தகராறில் பயங்கரம் தாய், மகள் உயிரோடு புதைப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மண்டசா மண்டலத்திற்கு உட்பட்ட ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோட்ரா தாலம்மா(60). இவரது மகள் மஜ்ஜி சாவித்திரி (40). அதே கிராமத்தை சேர்ந்தவர் தாலம்மாவின் சகோதரி மகன் கோட்ரா ராமராவ். இவருக்கும் தாலம்மாவுக்கும் இடையே நிலத்தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடக்கிறது. சில நாட்களுக்கு முன் தாலம்மாவும், மஜ்ஜி சாவித்திரியும் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக அமர்ந்து, ராமராவ் தங்கள் நிலத்தை அபகரிப்பதாக தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தில் ராமராவ் டிரக்டரில் மண் கொண்டு வந்து சமன்படுத்த முயன்றார். தாலம்மா தனது மகளுடன் சென்று, ராமாராவிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, ராமாராவ் உத்தரவுப்படி டிராக்டரில் இருந்த மண்ணை தாலம்மா, சாவித்திரி மீது கொட்டி உயிருடன் புதைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிச் சென்று அவர்களை மீட்டனர். இது தொடர்பாக ராமராவ் சகோதரர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post சொத்து தகராறில் பயங்கரம் தாய், மகள் உயிரோடு புதைப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Godra Thalamma ,Haripuram ,Mandasa Zone ,Srikakulam District, Andhra State ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...