×

40 வருடம் கழித்து நடிகைக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்

1960கள் தொடங்கி 90கள் வரை தமிழ் படங்களில் நடித்தவர் சாரதா. இவரை ஊர்வசி சாரதா என்று அழைப்பர். முன்பெல்லாம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஊர்வசி என்ற பட்டத்துடன் வழங்கப்பட்டது. மூன்று முறை சாரதா, ஊர்வசி விருது பெற்றிருக்கிறார். குங்குமம், துளசி மாடம், துலாபாரம், ஞானஒளி, தைபிறந்தால், என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்திருக்கிறார் சாரதா. அவருக்கு தற்போது 74 வயது ஆகிறது.
 
1979ம் ஆண்டு புஷ்யராகம் என்ற மலையாள படத்தில் நடித்தார் சாரதா. இப்படத்தை ஆண்டனி என்பவர் தயாரித்திருந்தார். ஆனால் அப்படத்தில் சாரதாவுக்கு பைனான்ஸ் பிரச்னை காரணமாக பேசியபடி முழு சம்பளமும் அவரால் தரமுடியவில்லை. கடன் பிரச்னையிலும் சிக்கிக் கொண்டார். அது அவரது மனதை உறுத்திக்கொண்டிருந்தது. தற்போது ஆண்டனி பைனான்ஸ் ரீதியாக நல்லநிலையில் இருக்கிறார்.

கடன்களை அடைத்து முடித்ததுடன் தனது பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். சாரதாவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கி மட்டும் கடந்த 40 வருடங்களாக தராமலிருந்ததை எண்ணி வருந்திய அவர் சென்னைக்கு சென்று  சாரதாவை நேரில் சந்தித்து பாக்கியை தர எண்ணினார்.
இந்நிலையில் சாரதாவே நிகழ்ச்சி ஒன்றுக்காக கேரளா வருவதை அறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சாரதாவை சந்தித்து சம்பள பாக்கியை தர முடிவு செய்த ஆண்டனி ஒரு கவரில் தர வேண்டிய சம்பள பாக்கி பணத்தை விட கூடுதலாக பணம் வைத்துக்கொண்டு சந்திக்க சென்றார். முதலில் ஆண்டனியை அடையாளம் தெரிந்துகொள்ள முடியாமலிருந்த நிலையில் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆண்டனி. உடனே அவரை அடையாளம் கண்டுகொண்டார் சாரதா. ஆண்டினி சம்பள பாக்கி பணத்தை தந்தபோது வாங்க மறுத்தார் சாரதா. ஆனால் அதை ஏற்காவிட்டால் நான் மனம் வருந்துவேன் என்று ஆண்டனி கூறியபிறகு அந்த சம்பள பாக்கியை வாங்கிக்கொண்டார்.

Tags : Producer ,actress ,
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...