×

தமிழ் பெண்கள் புறக்கணிப்பு : ஸ்ரீபிரியங்கா கவலை

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று சொன்னார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: மிக மிக அவசரம் படம், ஒரு பெண் காவலரின் வலியை சொல்லும் படம்.

பவானி பாலத்தில் 22 நாட்கள் கடும் வெயிலில் நின்று நடித்தேன். படத்தை பார்த்துவிட்டு பெண் காவலர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். நான் சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், நான் நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை. காரணம், நான் தமிழ் பெண். தமிழ் பேசத் தெரிந்த, தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகளை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை.

Tags : Tamil ,Sripriyanka ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு