×

மழையால் லொகேஷனை மாற்றிய நடிகர்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அனிதா பத்மா பிருந்தா என்ற படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் சேதம் அடைந்ததால் வேறு இடத்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கி இசை அமைத்து தயாரித்து நடிக்கும் ஏ.எல். சூர்யா கூறும்போது,’அனிதா பத்மா பிருந்தா என்ற நாவலை நான் எழுதி உள்ளேன்.

இளைஞன் ஒருவன் சினிமாவிற்கு வந்து எப்படி ஜெயிக்க போராடுகிறான் என்பதே கதை. இதில் பிரபல இயக்குனர், நடிகை பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. கேரளாவில் வயநாடு பகுதியில் படப்பிடிப்பு நடத்த எண்ணியிருந்தோம். மழை வெள்ளம் காரணமாக லொகேஷனின் தோற்றம் மாறிவிட்டதால் வேறு இடத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்.

இதற்கிடையில் இப்படத்தின் கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ய உறுப்பினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன். மாதங்கள் பல கடந்தும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இன்னும் பலரது உறுப்பினர் விண்ணப்பமும் அப்படியே இருக்கிறது. இதற்கு சங்க தலைவர் கே.பாக்யராஜ் உடனடி தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Tags : Actor ,location ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி