×

நான் ஹீரோ இல்லை... யோகிபாபு சொல்கிறார்

சில படங்களில் கதையின் நாயகனாக நடித்த யோகி பாபு  தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். அவர் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வந்தது. இதுபற்றி யோகிபாபு கூறும்போது,’தர்மதுரை, கூர்கா என 2 படங்களில்தான் கதை நாயகனாக நடித்துள்ளேன். அதன்பிறகு காமெடியனாகவே தொடர்ந்து நடித்து வருகிறேன்.

பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு 4 நாட்கள் மட்டும் நடித்திருந்தேன். ஆனால் அப்படத்தின் ஹீரோபோல் என்னை சித்தரித்திருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. அதேபோல் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி வசனம் எழுதியதாக கூறப்படுகிறது.

எனக்கு நகைச்சுவை வசனங்களை யாரும் எழுதித்தருவதில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை’ என்றார்.

Tags : hero ,Yogibabu ,
× RELATED ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்