×

தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்து 19 பேர் பலி: 26 பேர் மீட்பு

நைரோபி: தான்சானியாவில் ஏரியில் விழுந்து சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகினர். அதில் பயணித்த 26 பேர் மீட்கப்பட்டனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி 43 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்ட உள்நாட்டு விமானம், 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கியது. இதில் விமானத்தில் பயணித்த 19 பேர் பலியாகினர். விமான நிலையத்தை நெருங்கும் போது மழை பெய்ததால், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது….

The post தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்து 19 பேர் பலி: 26 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tanzania ,Nairobi ,
× RELATED கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி