×

தமிழில் ஹீரோயினான தெலுங்கு மிமிக்ரி கலைஞர்

18 வருடங்கள் இணை இயக்குனராக பணியாற்றி விட்டு, இப்போது உற்றான் படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியுள்ளார் ராஜா கஜினி. ரோஷன் ஹீரோவாகவும், ஹிரோஷினி ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். இதில் ஹிரோஷினி ஆந்திராவில் புகழ்பெற்ற மிமிக்ரி கலைஞர். 50 பிரபலங்களின் குரலில் தொடர்ந்து பேசி சாதனை படைத்தவர்.

அவரது சாதனையை பாராட்டி, என்.டி.ராமாராவ் வாழ்க்கை படத்தில், அவரது மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்கும் ஹிரோஷின், உற்றான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

மற்றும் வெயில் பிரியங்கா, ரவிசங்கர், வேல.ராமூர்த்தி, மதுசூதனன், மதுமிதா, நடித்துள்ளனர். ஹாலிக் பிரபு ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசை  அமைக்கிறார். ‘கல்லூரி மாணவர்களின் தலைவனாக வெற்றிபெறும் ஒருவனை, கல்லூரிக்கு வெளியே உள்ள சில சக்திகள் எப்படி பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது என்பது கதை’ என்றார் ரோஷன்.

Tags : mimicry artist ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!