×

பாரில் தகராறு 3 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (24), சுரேஷ் (29), ஜாபர் அலி (29) ஆகியோர், நேற்று மாலை தாம்பரம் – தர்காஸ் சாலையில் கன்னடபாளையம் பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி உள்ளனர். அப்போது, தங்களது செல்போனை திருடியதாக ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை திருவஞ்சேரியை சேர்ந்த பிரபு (29) மற்றும் அவரது நண்பர் தினேஷ் (40) ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.இதனால் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் பீர் பாட்டில், கற்கலால் தாக்கிக்கொண்டனர். இதில் பிரபு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, ஜெபஸ்டின், சுரேஷ், ஜாபர் அலி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post பாரில் தகராறு 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dambaram ,Jepustin ,Suresh ,Jabar Ali ,Bar ,Dinakaran ,
× RELATED 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற...