×

கடமலைக்குண்டு பகுதியில் பப்பாளி சாகுபடி பணி தீவிரம்

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பொன்னன்படுகை, குமணன்தொழு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பப்பாளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் அதிக விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பப்பாளி காய்களை சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் விவசாய நிலங்களுக்கு சென்று மொத்தமாக கொள்முதல் செய்து சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்கிறார்கள். இதனால் பப்பாளி சாகுபடி அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடமலைக்குண்டு விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடியால் விவசாயிகள் அதிகளவில் பயன் அடைகிறார்கள். எனவே நோய் பூச்சிகளில் இருந்து பப்பாளி காய்களை பாதுகாக்க ஒவ்வொரு நிலங்களுக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்….

The post கடமலைக்குண்டு பகுதியில் பப்பாளி சாகுபடி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kadamalaikundu ,Varusanadu ,Kandamanur ,Athangaraipatti ,Mayiladumparai ,Ponnanpadukai ,Kumanantholu ,Kadamalai ,Mylai ,
× RELATED கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை