×

டபிள்யூடிஏ பைனல்ஸ் அரையிறுதிக்கு சபலென்கா, சக்கரி தகுதி

போர்ட் வொர்த்: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்தொடர் அமெரிக்காவின் போர்ட்வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 2 பேர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுன்ட் ராபி அடிப்படையில் போட்டி நடந்து வருகிறது. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதிபெறுவர்.இதில் இன்று நான்சி ரிச்சி பிரிவில் நடந்த போட்டியில் கிரீஸ்நாட்டின் மரியா சக்கரி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஓன்ஸ் ஜபீரை வென்றார். ஏற்கனவே சபலென்கா, ஜெசிகா பெகுலாவை வென்றிருந்த சக்கரி, 3 வெற்றிகளுடன் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். முன்னதாக மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, 6-3, 6-5 என அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வென்றார். முதல் போட்டியில் ஓன்ஸ் ஜபீரை வென்றிருந்த சபலென்கா இன்று 2வது வெற்றியுடன் அரையிறுதிக்குதகுதி பெற்றார்….

The post டபிள்யூடிஏ பைனல்ஸ் அரையிறுதிக்கு சபலென்கா, சக்கரி தகுதி appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Zakari ,WDA Finals ,Port Worth ,Portworth, USA ,WDA Finals Semifinals Sabalenca ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…