×

கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பால்சம் மலர்கள்

ஊட்டி :  தமிழகம் மாளிகை கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பால்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். சிலர் ஊட்டி அருகேயுள்ள பிங்கர்போஸ்ட் தமிழகம் மாளிகைக்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர்.  இதனால், இங்குள்ள பூங்காவை தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். தற்போது, இப்பூங்காவில் 2ம் சசீசனுக்காக வைக்கப்பட்ட மலர் செடிகளில் உள்ள மலர்கள் வாரத்துவங்கியுள்ளன. எனினும், இங்குள்ள கண்ணாடி மாளிகையில் தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், விஐபிக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்….

The post கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பால்சம் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Hall Glass House ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...