×

மாற்று இடம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக வசிக்கும் பொதுமக்களின் வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் தெரிவித்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் சேகர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில், சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஊராட்சியில் வாய்க்கால் ஓரம் 50 ஆண்டு காலமாக குடியிருந்து வந்த 18 ஏழை குடும்பங்களை காலி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் வாகனத்துடன் வந்தனர். மேற்கண்ட வீடுகளை உடனடியாக காலி செய்யக் கூடாது. தற்போது மழை, புயல் காரணமாக இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டும். மேற்படி மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிப்படை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….

The post மாற்று இடம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Pallipat Panchayat ,Dinakaran ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...