×

போலீஸ்காரர் தூக்கில் தற்கொலை

திருப்பூர்: திருப்பூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம், சுருளிப்பட்டி சேர்ந்தவர் ஈஸ்வரன் (33). இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். குடும்பத்தோடு நல்லூர் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  ஈஸ்வரன் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பணி முடிந்து குடியிருப்புக்கு வந்தபின்னர், வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post போலீஸ்காரர் தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Forces ,Eeswaran ,Chirilipati, Honey District ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...