×

2 டிஜிபிக்கள் நாளையுடன் ஓய்வு

சென்னை: தமிழகத்தில் டிஜிபிக்கள் 2 பேர் நாளையுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழக சிபிசிஐடி டிஜிபியாக இருப்பவர் ஷகில் அக்தர். ஐபிஎஸ் அதிகாரியான இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிகிறது. அதேபோல, சிறைத்துறை டிஜிபியாக உள்ள சுனில்குமார் சிங்கின் பதவிக்காலமும் நாளையுடன் முடிகிறது. இருவருக்கும் நாளை மாலை சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து ெகாள்கின்றனர்.அதில் டிஜிபி ஷகில் அக்தர், பீகார் மாநிலம் டர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1962ம் ஆண்டு பிறந்த இவர், 1989ம் ஆண்டு ஐபிஎஸ் பணிக்கு தேர்வானார். இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், அரேபிய மொழிகளில் புலமை வாய்ந்தவர். இவர், பெங்களூர் சென்று கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய கைதிகளை சுட்டுக் கொன்ற தனிப்படைக்கு தலைமை வகித்தவர். பல்வேறு முக்கிய வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளார்.அதேபோல, சிறைத்துறை டிஜிபியாக உள்ள சுனில்குமார் சிங், 1988ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த ஊர் பாட்னா. இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் சிறப்பாக பேசுவார். இவர்கள் இருவரும் ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்….

The post 2 டிஜிபிக்கள் நாளையுடன் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Shakil Akhtar ,CBCID ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...