×

கட்டாய மதமாற்றம்: உபி.யில் 9 பேர் கைது

மீரட்: மதம் மாற கட்டாயப்படுத்தி மிரட்டுவதாக கூறப்பட்டு புகாரில் 3 பெண்கள் உட்பட 9 பேரை உபி போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் மங்கதாபுரம் காலனியில் குடிசை வீடுகளில் ஏழை மக்கள் பலர் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்ட போது, சில அமைப்பை சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து உணவு, பண உதவி செய்துள்ளனர். பின்னர், அவர்களின் மதத்தை பின்பற்ற கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மங்கதாபுரம் காலனி மக்கள் சிலர் போலீசில் அளித்த புகாரில், ‘உணவு கொடுத்து உதவியவர்கள் இப்போது மதம் மாற கட்டாயப்படுத்துகிறார்கள். அதோடு, எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, இந்து கடவுள்கள் படத்தை தெருவில் வீசி எறிந்தனர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மதம் மாறச் சொல்லி மிரட்டவும் செய்கின்றனர்,’ என கூறியிருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மதமாற்றம் செய்ய முயன்ற 3 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். …

The post கட்டாய மதமாற்றம்: உபி.யில் 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : UP ,Meerut ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...