×

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு அமைச்சர் ஆவடி சாமு.நாசர் அழைப்பு

சென்னை: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற தொண்டர்கள் அயராமல் உழைக்க வேண்டும் என்று அமைச்சர் ஆவடி சாமு.நாசர் கூறினார். திருவள்ளூர் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் பங்ேகற்றனர். நிகழ்ச்சியில்  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். அப்போது, அமைச்சர் ஆவடி சாமு.நாசர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற தொண்டர்கள் அயராமல் உழைக்க வேண்டும். கடந்த காலங்களில் எப்படி கலைஞர், நாட்டின் பிரதமரையும், ஜனாதிபதியும் தேர்வு செய்தாரோ, அதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் வரவேண்டும். அதற்கு நாமெல்லாம் அவருடைய கரத்தை வலுபடுத்த வேண்டும். இளைஞர் அணி உறுப்பினர்கள் அதிகரித்து அனைத்து பொறுப்புகளிலும், உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு அமைச்சர் ஆவடி சாமு.நாசர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Awadi Samus Nasser ,Chennai ,Aavadi Samus Nasser ,Dinakaran ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்