×

சாத்தான்குளம் கோர்ட் வளாகத்தில் போலீசாரை கண்டித்து கிணற்றில் குதித்த திருநங்கை

சாத்தானகுளம்: புகார் தொடர்பாக விசாரிக்காமல் போலீசார் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய திருநங்கை சாத்தான்குளம் கோர்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி (45). திருநங்கை. இவரது தம்பி முத்துக்குமார், கோயில் கொடை விழாவில் செல்போன் மாயமானது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கினாராம். இதுதொடர்பான புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார், முத்துகுமாரை கைது செய்தனர். இதனிடையே அந்த பெண்ணின் கணவர் தன்னை அவதூறாகப் பேசி தாக்கியதாக திருநங்கையான செல்வி, தட்டார்மடம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தபோது, போலீசார் மனுவை வாங்காமலும், விசாரிக்காமலும் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து செல்வி, சாத்தான்குளம் கோர்ட்டில் முறையிட்டபோது, இதுதொடர்பாக விசாரிக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று காலை சாத்தான்குளம் கோர்ட்டிற்கு மீண்டும் வந்த செல்வி, தனது புகார் குறித்து போலீசார் விசாரிக்கவில்லையென கூறி, நீதிமன்ற வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் தத்தளித்த செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். …

The post சாத்தான்குளம் கோர்ட் வளாகத்தில் போலீசாரை கண்டித்து கிணற்றில் குதித்த திருநங்கை appeared first on Dinakaran.

Tags : Satankulam Court ,Satanakulam ,Tutukudi ,Dinakaran ,
× RELATED “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக்...