×

நடிகரின் முகத்தில் குத்திய கண்ணாடி

ரிஸ்க்கான ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின்கள் டூப் நடிகரை பயன்படுத்துவதுண்டு. ஒரு சில நடிகர், நடிகைகள் ரிஸ்க் எடுக்க துணிகிறார்கள். இதில் சில சமயம் அவர்கள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் நடித்த போது கண்ணாடி துண்டுகள் உடைந்து அவரது முகத்தில் கண்ணுக்கு அருகில் குத்தியதில் ரத்தம் கொட்டியது. அதைக்கண்டு பதற்றம் அடைந்த படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டரின் தவறான வழிநடத்தல்தான் காரணம் என்று பேசப்பட்டது.

இது குறித்து குறிப்பிட்ட சந்தீப்,’இந்த விபத்து எதிர்பாராதது. கண்ணாடி உடைக்கும் காட்சியில் சில கண்ணாடி துண்டுகள் சிதறி என் முகத்தில் வலது பக்கம் மற்றும் இடது கண்ணுக்கு அருகிலும் குத்தியதில் ரத்தம் கொட்டியது. இதனால் படக்குழுவினர் பயத்தில் ஆழ்ந்தனர். என்னுடன் நடித்த ஸ்டண்ட் மேன் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன். இந்த சம்பவத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டரின் தவறான வழிநடத்தல்தான் காரணம் என்று மீடியாக்களில் தகவல் வெளியாகிறது. இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது எதிர்விளைவு என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்துதான் நடித்தேன். அதற்காக ஸ்டண்ட் மாஸ்டரை குறை சொல்வதை ஏற்க முடியாது’ என்றார்.

Tags : actor ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...