×

காவல் சிறார் மன்றங்களில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, சென்னையில் உள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களுடன் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, சென்னை காவல் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தியும் மற்றும் கம்ப்யூட்டர் உள்பட பல  பயிற்சி வகுப்புகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களிலும், மாணவ, மாணவிகளை மகிழ்விக்கும் விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதே போல் காவல் அதிகாரிகள் தங்களின் எல்லைக்குட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களில் சிறார் மற்றும் சிறுமியர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு மற்றும் பரிசுப்பொருட்கள் அளித்தும் சிறப்பு விருந்து அளித்தும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்….

The post காவல் சிறார் மன்றங்களில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Police Commissioner ,Shankar Jiwal ,Police Juvenile ,Girls' Club ,
× RELATED ஒரு வார சிறப்பு சோதனை: கஞ்சா விற்ற 24 பேர் கைது