×

கோடியக்கரையில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு செங்கால் நாரை, கூழைக்கிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான், வரி தலைவாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சக்கணக்கில் வந்துள்ளது.கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அடிக்கடி மழை பெய்வதாலும், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும் தற்போது கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்துள்ளது. இந்த பறவைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ளதை பார்ப்பதற்கே ரம்மியமாக உள்ளது….

The post கோடியக்கரையில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodiyakaram ,Kodiyakara ,Vedaranya, Nagai District ,Kodiyagaram ,Dinakaran ,
× RELATED கோடியக்கரையில் சீசன் களைகட்டியது:...