×

மாணவிக்கு தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்த சவுரியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (42) என்பவர், கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, ஆய்வுக்கூடத்திற்கு வரவழைத்ததாக தெரிகிறது. அப்போது, ஆசிரியர் சரவணகுமார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இது தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் சரவணகுமாரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்த அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு அனுப்பி வைத்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய அவர், சரவணகுமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்….

The post மாணவிக்கு தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Salem ,Sauriyur ,Jalakandapuram ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...