சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்புத் தொடரில் சென்னையின் எப்சி அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை வெற்றிக் கணக்கை தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் நடந்த பெங்களூருக்கு எதிரான 2வது ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் 3வது ஆட்டத்தில் கோவா எப்சி அணியை சென்னை எதிர்கொள்கிறது. அது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிரெட்ரிக், ‘முதல் 2 ஆட்டங்களில் இருந்த அதே உத்வேகத்துடனும், தீவிரத்துடனும் கோவாவுக்கு எதிராகவும் விளையாட வேண்டும். பெங்களூருக்கு எதிரான ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் முடிந்திருக்கலாம். நாங்கள் டிரா செய்தோம். அதனால் 2 ஆட்டங்களில் விளையாடி 4 புள்ளிகளுடன் இருக்கிறோம். இந்த 2 ஆட்டங்களிலும் நமது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியை வலுப்படுத்தும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதுதான் எங்கள் இலக்கு. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை நமது ஆற்றல், வலிமை, உத்வேகத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது. எதிரணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை தரக்கூடாது. பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற கோல்கீப்பர் மஜும்தார் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார். அவருக்கு பதில் தேவான்ஷ் கோல்கீப்பர் பணியை தொடருவார்’ என்றார். இந்த சந்திப்பின் போது தற்காப்பு ஆட்டக்காரர் நாரயண் தாஸ் உடன் இருந்தார்….
The post சென்னையின் தீவிரம் குறையாது: பயிற்சியாளர் பிரெட்ரிக் appeared first on Dinakaran.