கம்ப்யூட்டரை விடவும் அதிவேகமாக கணக்குகளுக்கு தீர்வு கண்டு, உலக கணித மேதைகளை ஆச்சரியப்படுத்தியவர், பெங்களூருவை சேர்ந்த சகுந்தலா தேவி. தற்போது அவரது வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாக்கப்படுகிறது. இதை அனு மேனன் இயக்க, விக்ரம் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
உலகையே வியக்க வைத்த மனித கம்ப்யூட்டர் ஒருவரது வேடத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வத்துடன் காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார், வித்யா பாலன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் ரிலீசாகிறது.